உன்னை நான் நேசித்தேன்
உன் அன்பை மட்டும் யாசித்தேன்
காதல் பாடம் வாசித்தேன்
உன்னை மூச்சுகாற்றாய் சுவாசித்தேன்
உன்னை ராப்பொழுதும் வர்ணித்தேன்
நானும் உன்னை மன்னித்தேன்!
காரணம்,
என் துயில் போனதுனை எண்ணித்தான், இவ்வளவு அழகாக உனை இறைவன் ஏன் படைத்தான்?
எப்போதும்
ஆசை தூண்டும் உனை கொஞ்சத்தான்
யாரேனும் காண்பரோ என நீயும் அஞ்சத்தான்
நானும் கொஞ்சம் தள்ளித்தான் உனை கூட்டிச்சென்று உன் கன்னம் சிறிது கிள்ளித்தான்
என் மடியில் கொஞ்சம் உன்னை அள்ளித்தான் முழுதாகப் பருக ஏதுவான நீ தேன்தான்
உன்னை பருகும் வண்டு நான்தான்
வண்ண மயில் நீதான்
வான் மழை நான்தான்!
என் வருகைக்கு ஏங்கி
வண்ண மயில் மாது
தோகை விரிக்கும் போது
நான் போவேனோ உனை நீங்கி!!!
~ surece ~
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக