ஞாயிறு, 6 நவம்பர், 2016

பெண்ணே உன் பிரிவு

பெண்ணே உன் பிரிவின் துயரம் தாயைத் தொலைத்த குழந்தைக்கு மட்டுமே தெரியும்!

எங்கே நீ இருக்கிறாய் என என் கால்கள் தண்ணீரைத் தேடி பரவும் கருவேலி முள்ளின் வேர்போல பாயும்!

கண்ணே உன்னை காண எந்த கிரகங்கள் நோக்கியும் பயணிக்கத் தயார்!
நீயே எனக்கு இரண்டாம் தாயார்.
இரண்டையும் பிரிக்க அந்த கடவுள் எனக்கு யார்?

சொர்க்கத்தில் இருந்தாலும் நீ என் பக்கத்தில் இருப்பதாய் உணர்கிறேன்.
நீ வெக்கத்தில் சிவந்தாலும் என்னாச்சோ என பதறுகிறேன்.

உன்னுடன் நான் பேசுவது தெரியாமல், பக்கத்தில் இருப்பவர்கள் காற்றில் என்ன தனியே பேசுகிறாய் என கேட்க பாவம் அவர்கள் பைத்தியக்காரர்கள் என்று எண்ணி சிரிக்கிறேன்....
ஆம் அவர்கள் பைத்தியக்காரர்கள் என்று எண்ணி சிரிக்கிறேன்...!!!

~surece~

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக