நீதான் என் காதல் எதிராளியோ!
உன் நினைவுகள் தான் என்னைத் தாக்கும் ஆயுதமோ!
புத்தகத்தை திறந்து புவியியல் படித்தாலும் புத்தியெல்லாம் உன் பக்கம் தான்.
மத்தபடி ஒன்றுமில்லை, உன்மேல் கொண்ட காதல் தான்.
உன் பேரை சொன்னாலே நாவெல்லாம் இனிக்கிறது,
நான் உன் நினைப்பால் கொண்ட உடற்சூடெல்லாம், உன் அணைப்பால் தணியுமடி!
உலகெல்லாம் மறந்து போவேன் உன்னருகே நானிருந்தால், ஆனால் பெண்ணே உன்னை மறந்தால் இறந்து போவேன்!
என்னவோ தெரியல பெண்ணே என் கண்கள் ராவெல்லாம் தூங்கல உன்னால
கண்கள் மூடினாலும் இருளாய் தெரியவில்லை, மாறாக வண்ணமாய் உன் அழகு முகம் இமையினுள் தெளிவாக தெரிகிறது!
காதல் நோயால் நிதமும் சாகிறேன் பெண்ணே,
மருந்து உன்னிடம்
எப்போது தருவாய் உன்னை என்னிடம்?
என் இரவையும், பகலையும் இணைத்த உன் ஞாபகம்
என் உயிரையும், உடலையும் பிரிக்கலாமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக