சனி, 19 அக்டோபர், 2019

பேதை மனதின் புலம்பல்

அவள் சொன்ன சொல்லை
தண்ணீரிலே எழுதி வைத்தேன்.
பலன் தினம் கண்ணீரிலே தீக்குளித்தேன்.

கல்நெஞ்சக்காரி அவள்
பொய்பேச்சுக்காரி அவள்

யாவும் உண்மையென
கருத்ததெல்லமாம் தண்ணீர்
வெளுத்ததெல்லாம்
பாலென நான் இருந்தேன்.

அவள் கள் எனத் தெரியாமல்
நாளும் பருகிவிட்டேன்.
அவளுக்கே அடிமையானேன்.
போதையில் பேதையானேன்.

நாள்தோறும் நீ வேணும்
என கேட்கும் வேளையில்
முடியாது என்றே விலகிவிட்டாள்.

மீளவும் வழியில்லை
வாழவும் வழியில்லை.

மயங்கிய என் உள்ளம்
மாய்ந்தால் போதும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக